தமிழகத்திலும் மின்சார வாகன பயன்பாட்டை கட்டமைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. முதற்கட்டமாக, கடந்த ஆகஸ்டு 26ம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்வில் 2 மின்சார பேருந்துகள் சேவையை முதல்வர் பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பரிசோதனை முயற்சியாக இந்த பேருந்து சேவை தொடங்கப்பட்ட நிலையில், சென்னை சென்ட்ரல் முதல் திருவான்மியூர் வரை தினமும் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக இயக்கப்பட்டு வருகிறது.
இந்த பேருந்தில் 32 பேர் உட்கார்ந்து கொண்டும், 25 பேர் வரை நின்று கொண்டு செல்ல முடியும். பேட்டரி ஸ்வேப்பிங் தொழில்நுட்பம் கொண்ட இந்த பேருந்தில் இரு பேட்டரிகள் இடம்பெற்றுள்ளன. ஒரு பேட்டரியை ஒரு மணிநேரம் சார்ஜ் செய்தால் அதிகப்பட்சமாக 50 கி.மீ வரை இயக்க முடியும்.